
இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை 2.33 மணியளவில் 6.0 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. எனினும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து தெற்கு, தென் கிழக்குக் கடல் பகுதியில் 1,151 கிலோ மீட்டர் (716 மைல்) ஆழத்தில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நில நடுக்கம், நிலப்பகுதியிலிருந்து வெகுதூரத்தில் உணரப்பட்டதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை 6.4 மற்றும் 6.6 ரிச்டர் அளவில் நில அதிர்வுகள் தாக்கியதைத் தொடர்ந்தே இலங்கையில் இத்தாக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று மீண்டும் சிலியில் 5 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவை 5 ரிச்டர் அளவிலும் குறைவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிலிப்பைன்சிலும் 5 ரிச்டர் அளவிலான நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.